புதுடெல்லி:
அடுத்த ஆண்டு முதல் முதுகலை மருத்துவ படிப்பில் சேர ‘நெக்ஸ்ட்’ என்ற பெயரில் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டு முதல் இளநிலை மருத்துவ படிப்பின் இறுதியாண்டில் நடத்தப்படும் தேர்வு ‘நெக்ஸ்ட்’ என்ற பெயரில் நடைபெறும்.
இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களை கொண்டே முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம் எனவும் முதுநிலை மருத்துவ படிப்புக்கு ‘நீட்’ தேர்வு கிடையாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.