ஆக்லாந்து:
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியுள்ளது.
நியூசிலாந்து நாட்டுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி , 3 ஒருநாள் போட்டிகளை நியூசிலாந்து அணியுடன் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. 2வது போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை குவித்துள்ளது. இதனையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி, 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களே எடுத்தது. இந்நிலையில், 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.