திருமணத்தை நடத்திய அர்ச்சகருடன் மாயமான மணப்பெண்..!

திருமணத்தை நடத்திய அர்ச்சகருடன் மாயமான மணப்பெண்..!

சிரோஞ்ச்:

தன் திருமணத்தையே நடத்திவைத்த அர்சகருடன் புதுமணப்பெண் மாயமாகியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் சிரோஞ்ச் அருகே உள்ள அசாத் கிராமத்தில் கடந்த 7ம் தேதியன்று திருமணம் ஒன்று நடந்துள்ளது. இந்த திருமணத்தை கோவிலில் அர்ச்சகராக வேலை செய்யும் வினோத் மகாராஜ் நடத்தி வைத்துள்ளார்.

இந்த திருமணம் நடைபெற்று 16வது நாளில், புதுமணப்பெண்ணும், அர்ச்சகர் வினோத்தும் காணாமல்போனது தெரியவந்துள்ளது.

அர்ச்சகருடன் மாயமான புதுமணப்பெண், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.30,000 ரொக்கத்தை எடுத்துச்சென்றுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணுக்கும் அர்ச்சகர் வினோத் மகாராஜ் என்பவருக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், அந்த அர்ச்சகருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்