மான்செஸ்டர்:
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி பந்துவீச்சில் களமிறங்கியுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் நியூசிலாந்து அணி மோதுகிறது.
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபடுகிறது.