பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை..!

பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை..!

சென்னை:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டில் புதிய சீருடை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கரும்பச்சை நிறத்தில் கால் சட்டையும், இளம் பச்சை நிறத்தில் கட்டமிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு இதே நிறத்தில் புதிய சீருடை வழங்கப்படும்.

மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சந்தன நிற வண்ணத்தில் கால் சட்டையும், அதே நிறத்தில் கட்டமிடப்பட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு சந்தன நிறக் கோட்டுடன் கூடிய சீருடை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்