புதிய சட்டக்கல்லூரி திறப்பு

புதிய சட்டக்கல்லூரி திறப்பு

சேலம்:

சேலத்தில் புதிய சட்டக்கல்லூரியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

சேலத்தில் புதிதாக திறக்கப்பட்ட சட்டக்கல்லூரியின் திறப்பால், தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சட்டக்கல்லூரியில் 3 ஆண்டுகால சட்டப்படிப்புக்கு 80 இடங்களும், 5 ஆண்டுகால சட்டப்படிப்புக்கு 80 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. கல்லூரியின் அலுவலராக கோவை அரசு சட்டக்கல்லூரியின் முதல்வர் கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்