புதுடெல்லி:
உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 4 புதிய நீதிபதிகள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட், ஹிமாச்சல் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கடந்த 19ம் தேதி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 புதிய நீதிபதிகளும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.