‘என்இஎப்டி’ இனி 24 மணி நேரம்

  • In General
  • December 7, 2019
  • 207 Views
‘என்இஎப்டி’ இனி 24 மணி நேரம்

மும்பை:

வங்கிகள் மூலம் ஆன்லைன் பணப்பரிமாற்றமான என்இஎப்டி முறை இனி 24 மணி நேரமும் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், ஆன்லைன் பணப்பரிமாற்றமான நேஷ்னல் எலக்ட்ரானிக் பண்ட் டிரான்ஸ்பர் (என்இஎப்டி) வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் 24 மணி நேரமும் அனைத்து நாட்களிலும் பணப்பரிமாற்றம் நடைபெறும் எனவும், அதாவது, 15ம் தேதி இரவு 12.30 முதல் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வார நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 7 மணியிலும், முதல் மற்றும் 3வது சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் என்இஎப்டி பணப்பரிமாற்றம் இருந்து வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்