நீட் தேர்வு பயத்தால் மதுரையில் 19 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த ஜோதி துர்காவின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் மாணவி தற்கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் விக்னேஷ் என்ற மாணவன் அரியலூரில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.