சென்னை:
நீட் தேர்வு முறைகேடுகள் அதிகாரிகள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக நடந்த விசாரணையில், நீட் தேர்வு முறைகேடுகள் அதிகாரிகள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும், ஆள்மாறாட்டத்தில் எத்தனை மாணவர்கள் ஈடுபட்டனர் என்றும் எவ்வளவு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது? நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக அக்டோபர் 15ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க சிபிசிஐடி-போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்பதால் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகத்தை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.