நீட்டில் பல பேர் ஆள்மாறாட்டம்.. அதிர்ச்சி தகவல்

நீட்டில் பல பேர் ஆள்மாறாட்டம்.. அதிர்ச்சி தகவல்

சென்னை:
தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்களை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சரிபார்த்துக் கொண்டிருக்கிறது.

உதித் சூர்யா தந்தை வெங்கடேசனிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவம் வெளிவந்துள்ளது.

உதித் சூர்யா போன்று 6 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாவும், மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதாகவும் சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உதித் சூர்யா மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்காக சென்னை மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் 20 லட்சம் பணம் கைமாறியுள்ளதாக வெங்கடேசன் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து சிபிசிஐடி போலீசார் மும்பையில் உள்ள நீட் பயிற்சி மையம் மற்றும் நீட் தேர்வு மையங்களில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சிபிசிஐடி போலீசார் மும்பை சென்று விசாரித்த பின்னரே இன்னும் யார் யார் இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவரும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்