சென்னை:
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 6ம் தேதி வரை கால அவகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளான பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் மே 3ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வை 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் எழுதலாம்.
இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்ம் கடந்த 2ம் தேதி தொடங்கியநிலையில், டிசம்பர் 30 அன்று இரவு 11:59 மணியுடன் கால அவகாசம் நிறைவடைந்தது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.