ஆள்மாறாட்டம்: நீட் ஆவணங்கள் சரிபார்ப்பு

  • In Chennai
  • September 20, 2019
  • 191 Views
ஆள்மாறாட்டம்: நீட் ஆவணங்கள் சரிபார்ப்பு

சென்னை:

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்படுகிறது.

மொத்தம் 4,000 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன. சான்றிதழ்கள், புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்த தகவல்களை உடனுக்குடன் மருத்துவ கல்வி இயக்குனரின் மின்னஞ்சலுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக 5 பேர் சிக்கிய நிலையில், இதில் கல்வி அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம் எனவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்