நீட் தேர்வுக்கு விண்ணப்பம்; நாளை கடைசி

நீட் தேர்வுக்கு விண்ணப்பம்; நாளை கடைசி

சென்னை:

மருத்துவ படிப்புக்கானன நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் முடிவடைவதால், மேலும் நீட்டிக்க எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

மருத்துவ படிப்புகளான பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் மே 3ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வை 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் எழுதலாம்.

இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்ம் கடந்த 2ம் தேதி தொடங்கியநிலையில், நாளை நள்ளிரவு 11:59 மணியுடன் கால அவகாசம் நிறைவடைகிறது.

இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இதுவரை கால அவகாசம் நீட்டிக்கப்படாத நிலையில், இனியாவது நீட்டிக்கப்படுமா என்று பெற்றோர், மாணவர் பெற்றோர் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்