புதுடெல்லி:
பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சி தொடங்கியது. இதில், பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
டெல்லி அசோகா நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த விருந்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.