மும்பை:
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
சிவசேனா கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவர்கள் 2 நாட்கள் அவகாசம் கோரியதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோத்தாரியை சந்திக்க, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அஜித் பவார், தனஞ்சய் முண்டே உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.