சென்னை:
தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினியின் புதிய படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தர்பார் படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிவா இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன் சந்திரமுகி, சிவாஜி, குசேலன் போன்ற படங்களில் ரஜினியுடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.