லாகூர்:
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் என்ஏபி அதிகாரிகளால் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
அல் அஜிஜியா ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப் லாகூரின் கோட் லக்பத் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், சௌத்ரி சுகர் மில்ஸ் நிறுவன விவகாரத்தில், லாகூர் சிறைக்கு சென்று நவாஸ் ஷெரீப்பை என்ஏபி அதிகாரிகள் கைது செய்து நேஷனல் அக்கவுன்டபிலிட்டி நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 15 நாள் காவலில் விசாரிக்க என்ஏபி அதிகாரிகள் கோரிக்கை விடுத்த நிலையில், சிறை வளாகத்திலேயே விசாரணை நடத்தியிருக்கலாம் என்றும் நவாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.