திருவாரூர்:
திருவாருர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் 13வது தேசிய நெல் திருவிழா கோலாகலமாக துவங்கியது. இதில் உணவுத்துறை அமைச்சர், திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
இந்த விழா தொடங்குவதற்கு முன், நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமனின் புகைப்படங்களை விவசாயிகள் ஏந்தி, வாத்தியங்கள் முழங்க ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசிய நெல் திருவிழாவில், மாப்பிள்ளை சம்பா,தேங்காய் பூ சம்பா, கம்பன் சம்பா, சீரக சம்பா, கருங்குருவை, பூங்கார், சிவப்பு கவுனி, வள்ளி கார், மடு முழுங்கி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் வேளாண் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.