தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றம்

தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி:

நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

இந்திய மருத்துவ கவுன்சிலை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றும் வகையில், தேசிய மருத்துவ சட்டத் திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நீட் தேர்வு ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து அதிமுக எம்பிக்கள் விவாதத்தின்போது வெளிநடப்பு செய்தனர். பின்னர், இந்த மசோதா மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்