பள்ளி பாடப்புத்தகத்தில் பிழையுடன் தேசிய கீதம்!

பள்ளி பாடப்புத்தகத்தில் பிழையுடன் தேசிய கீதம்!

சென்னை:

தமிழக அரச சார்பில் அச்சடிக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகத்தில் தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடப்புத்தகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மீதமுள்ள 8 வகுப்புகளின் பாடப்புத்தகத்தில் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.

இந்நிலையில், 1 மற்றும் 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பிழையுடன் அச்சாகியுள்ளது. தேசிய கீதம் பாடல் வரிகளில் பிழைகளை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தவறை சரிசெய்து, புதிய புத்தகங்களை உடனடியாக அச்சடித்து, பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கீதம் சரியான வரிகள்:

ஜன கண மன அதிநாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல வங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவசுப நாமே ஜா கே
தவசுப ஆசிஷ மாகே
காயே தவஜய காதா
ஜன கண மங்கல தாயக ஜயகே 
பாரத பாக்ய விதாதா
ஜயஹே ஜயஹே ஜயஹே
ஜய ஜய ஜய ஜயஹே

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்