நாசா விண்வெளி மாநாட்டில் பங்கேற்கும் திருச்சி மாணவி..!

நாசா விண்வெளி மாநாட்டில் பங்கேற்கும் திருச்சி மாணவி..!

திருச்சியைச் சேர்ந்த மாணவி காயத்ரி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குச் செல்லவுள்ளார்.

திருச்சி மாவட்டம், உறையூா் பாத்திமா நகரைச் சோந்தவர் காயத்ரி. திருச்சி சமயபுரத்தில் உள்ள கே.ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இசிஇ இறுதியாண்டு படித்து வருகிறார்.

 

இவர் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்ட்ரோ நெட் மற்றும் கோ 4 குரு ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் நடத்திய தகுதித் தோவில் சிறந்த திறனாளா் என்று தேர்வாகியுள்ளார். கல்லூரி மாணவர்களுக்கான இந்தத் தேர்வில், தரவரிசை (கிரேட்) அடிப்படையில் 2-ஆம் இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குச் செல்வதற்குத் தோவாகியுள்ளாா்.

வரும் ஜுன் மாதம் நாசாவில் நடைபெறவுள்ள உலகளாவிய விண்வெளி அறிவியல் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளாா்.

இவருடைய தந்தை பாலசுப்ரமணியன் மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணிபுரிந்து வருகிறார். தாய் உஷா ஒரு தனியார் பள்ளியில் ஆங்கிலப் பயிற்றுநராக உள்ளார்.

நாசாவிற்கு செல்ல இவருக்குப் போதிய வசதி இல்லாத நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மாவட்ட நல நிதி பணிக்குழு நிதியில் இருந்து காயத்ரிக்கு 75,000 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். நாசா செல்ல 2 லட்சம் ரூபாய் செலவாக உள்ள நிலையில் நிதியுதவி கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கடந்த 26ஆம் தேதி கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

நாசாவில் நடைபெறும் சா்வதேச அளவிலான விண்வெளி அறிவியல் தோவிலும் காயத்ரி பங்கேற்கிறாா். இத்தோவில் தேர்ச்சி பெற்றால், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் விண்வெளி துறைசார்ந்த பட்ட மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்பைப் பெறுவார். இதற்கான கல்விக் கட்டணம் முழுவதையும் நாசா விண்வெளி ஆய்வு மையமே ஏற்றுக்கொள்ளும். நிச்சயம் தேர்ச்சி பெற்று, இந்தியாவிற்கு உலகளாவிய அளவில் பெருமை சேர்ப்பேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் காயத்ரி.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்