இந்தியாவின் வலிமை நிரூபணம்

இந்தியாவின் வலிமை நிரூபணம்

புதுடெல்லி:

அயோத்தி நிலப்பிரச்னை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தி தீர்ப்புக்கு பின், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அந்த உரையில், மாரத்தான் விசாரணைக்குப் பின்பு தீர்ப்பு வந்துள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியாவில் உள்ள அனைத்து சமூகங்களை சேர்ந்த மக்களும் திறந்த இதயத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. தீர்ப்பை ஏற்றுக்கொள்வது நமது கலாச்சாரத்தில் சகிப்புத்தன்மையை பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்த நாள் சிறந்த உதாரணம். மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி அனைவரும் பணியாற்ற வேண்டும்; இந்தியாவை கட்டமைப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்