புதுடெல்லி:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லையென்றால், நிதியும் தர முடியாது என மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி பேசினார். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய தனி சட்டம் வேண்டும் என அவர் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து பேசிய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக அரசு கட்டாயம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தாவில்லை என்றால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காது என மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.