புதுச்சேரி:
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துவக்கிவைத்தார்.
ஈஷா பசுமை கரங்கள் சார்பில், புதுச்சேரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நட கடந்த 2019ம் ஆண்டு திட்டமிட்டது.
இந்நிலையில் பாரதி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து உள்ளிட்டோர் மரக்கன்றுகள் நட்டு, திட்டத்தை தொடங்கிவைத்தனர்.