ஸ்டாலினிடம் நல்ல பெயரை வாங்க அதிமுகவினர் செய்து வரும் உதவிகளை இல்லை என்பதா திமுக எம்எல்ஏவின் பேச்சிற்கு அதிமுகவினர் கண்டனம்

ஸ்டாலினிடம் நல்ல பெயரை வாங்க அதிமுகவினர் செய்து வரும் உதவிகளை இல்லை என்பதா திமுக எம்எல்ஏவின் பேச்சிற்கு அதிமுகவினர் கண்டனம்

தளி எம்எல்ஏவும், திமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருபவர் Y.பிரகாஷ் இவர், மே 05 அன்று திமுக தலைவர் ஸ்டாலினுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உறையாடியபோது, திமுகவினர் பல்வேறு இடங்களில் நேரடியாக உதவி வருவதாகவும் ஆளுங்கட்சி தரப்பில் கேபி.முனுசாமி ஒருநாள் மட்டுமே உதவிய நிலையில், மற்ற நிர்வாகிகள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என குற்றம்சாட்டி உறையாற்றினார், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலான நிலையில்

இதனை முழுமையாக மறுத்துள்ள ஒசூர் நகர செயலாளர் நாராயணன்:

ஒசூர் மட்டுமல்லாது அதிமுகவினர் மாவட்டம் முழுவதும் ஏழை எளியோருக்கு தொய்வின்றி உதவி வருகின்றனர்,

தனது தலைமையில் 700 துப்புரவு பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பையும்,2 ஆயிரம் தினக்கூலிகளுக்கு உணவு பொருட்களை அடங்கிய “kit” வழங்கியதுடன், மாவட்டம் முழுவதும் 30 லட்சம் ரூபாய்க்கான நிதியை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கியதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை கேபி.முனுசாமி வழங்கியதையும்,நகர அதிமுக சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை முன்னின்று வழங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்

கிருஷ்ணகிரி மேற்கு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து பகுதிகளிலும் ஏழை எளியோர் உணவு பொருட்களுக்கு பாதிக்கப்படாத வகையில் 500 டன் காய்கறிகளை வழங்கி இருப்பதுடன், தொடர்ந்து உதவி வருவதாகவும்

ஆனால் அதிமுக நிர்வாகிகள் வெளியில் வருவதே இல்லை என பேசுவதும், உதவிகளை செய்யவே இல்லை என அதிமுக அரசின் சிறப்பான திட்டங்களால் மக்களின் ஆதரவை பொருத்துக்கொள்ளாமல் மனக்குமுறல்களின் வெளிப்பாடே இது என குற்றம் சாட்டி, கண்டித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்