மும்பை:
மும்பையிலிருந்து 2 நாட்கள் கழித்து பெங்களூர் திரும்புவதாக மஜத எம்எல்ஏ நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கர்நாடக முதல்வர் குமாரசாமி எம்எல்ஏக்களுடன் கலந்தாலோசிக்காமல் வெளிநாடு சென்றார். மாநிலத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை. மாநிலத்தில் வளர்ச்சி இல்லாததால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளோம் என நாராயண கவுடா தெரிவித்தார்.
மேலும், மும்பை ஓட்டலில் இருந்து 2 நாட்களுக்கும் பின் பெங்களூரு திரும்புவதாக நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.