நாங்குநேரி தொகுதி காலி; அரசாணை வெளியீடு!

நாங்குநேரி தொகுதி காலி; அரசாணை வெளியீடு!

சென்னை:

தமிழக சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், கன்னியாக்குமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றதையடுத்து, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் அளித்தார்.

இதனையடுத்து, நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் நாங்குநேரியில் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்