கடந்த 2014ம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது ஐபிசி 328ன் படி மதுபானக் கடை மூலம் போதைப் பொருள் விற்பது குற்றமில்லையா? என நந்தினி நீதிபதியிடம் முறையிட்டார்.
இதனையடுத்து நந்தினி மற்றும் அவரது தந்தை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு வாரத்தில் நந்தினிக்கு திருமணம் நடைபெறுகின்ற நிலையில் சிறைக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.