வழக்கில் தானே ஆஜராகி பரோல் பெற்ற நளினி.!

வழக்கில் தானே ஆஜராகி பரோல் பெற்ற நளினி.!

வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

மகளின் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் அவரே ஆஜராகி வாதாடினார். அதை தொடர்ந்து நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது நளினி வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ளார். பரோலில் வெளியே வந்த நளினியை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்