சென்னை:
தனது மகளின் திருமணத்துக்காக பரோல் கோரிய வழக்கில், ஆயுள் தண்டனை கைதி நளினி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடுகிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, தன்னுடைய மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பரோல் கேட்டு மனு செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில், நளினி நேரில் ஆஜராகி வாதாடுவதற்காக உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.