சென்னை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, இணையத்தில் வீடியோ வெளியிட்டதாக சம்மன் அனுப்பிய நிலையில், சிபிசிஐடி அலுவலகத்தில் நக்கீரன் கோபால் இன்று ஆஜரானார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேரை கைது போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோவை நக்கீரன் இதழ் இணையதளத்தில் வெளியிட்டது.
இது சம்பந்தமாக சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய நிலையில், நக்கீரன் கோபால் இன்று சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து, சென்¬னை சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.