சென்னை:
கடந்த 14ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடந்தது.
நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
இதில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்த, தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க இந்த செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆவணங்களை, ஓய்வுபெற்ற நீதிபதியும், தேர்தல் அதிகாரியுமான முன்னாள் நீதிபதி பத்மநாபனிடம் நடிகர்சங்கத் தலைவர் நாசர் ஒப்படைத்தார்.
இதன்மூலம், தென்னிந்தி நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.