சென்னை:
நடந்துமுடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வெளியூரிலிருந்து வரும் உறுப்பினர்கள் சென்னை வந்து வாக்களிக்க அனுமதி மறுத்ததாக, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்துசெய்யக்கோரி பெஞ்சமின் உள்ளிட்ட 3 துணை நடிகர்கள் உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் வந்தது. இதில், வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என நடிகர் விஷால் தரப்பு கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து.
நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.