சென்னை:
விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்தது, இனி அதை பயன்படுத்த முடியாது என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
மேலும், ‘சந்திரயான் 2’ முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும் ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கி வருகிறது, இதில் கிடைத்த அனுபவத்தின் மூலம் அடுத்தக்கட்ட முயற்சியில் இந்தியா வெற்றி பெறும்.
‘சந்திரயான் 2’ ஏவப்பட்ட பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது எனவும், உலகமே இந்தியாவை உற்று கவனித்து வருகிறது எனவும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.