கவுகாத்தி:
அசாமில் முஸ்லிம் முதியவர் சிவன் கோவிலை பராமரித்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அசாம் மாநிலம், கவுகாத்தி அருகே பிரம்மபுத்ரா நதிக்கரை அமைந்துள்ளது. இங்கு சிவன் கோவில் உள்ளது.
இதனை ரஹ்மான் 73, என்ற முஸ்லிம் முதியவர் பராமரித்து வருகிறார்.
கோவிலை சுத்தம் செய்வது, விளக்கு ஏற்றுது, பூஜை செய்வது என்று பல பணிகளை அவரே செய்து வருகிறார்.
சிவபெருமானை நானா என அன்புடன் அழைக்கிறார். இந்தியாவில் மத நல்லிணத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்.
இது பற்றி மோதிபர் ரஹ்மான் கூறியதாவது: எனது மூதாரையர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவபெருமான் தினமும் பூஜை செய்து வழிபாடு நடத்தினால் நன்மை கிடைக்கும் என்று கூறியுள்ளது.
அவர் கூறியபடி நாங்கள் பரம்பரை பரம்பரையாக கோவிலை பராமரித்து வருகிறார். சுமார் 500 ஆண்டுகளாக இக்கோவிலை பராமரித்து வருகிறோம்.
எனக்கு பின்னால் என்னுடைய மகன் இப்பணியை தொடர்ந்து செய்து வருவார் என்று கூறினார்.