பெங்களூரு:
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் முருகனின் காவல் 8 நாட்கள் நீட்டித்து பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி லலிதா ஜூவல்லரி திருட்டு வழக்கு தொடர்பாக முருகனை விசாரிக்க திருச்சி போலீஸ் கமிஷனர் பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
முருகனை ஏற்கனவே 4 நாள் போலீசார் விசாரணை செய்த நிலையில் மேலும் 8 நாட்கள் காவல் நீட்டித்து பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.