பட்டப்பகலில் வாலிபர் குத்திக்கொலை..!

பட்டப்பகலில் வாலிபர் குத்திக்கொலை..!

சென்னை:

சென்னை மயிலாப்பூரில் பட்டபகலில் வாலிபர் ஒருவரை குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை மயிலாப்பூ​ரை சேர்ந்த தினேஷ் என்பவர் சாலையில் நடந்துசென்றபோது, திடீரென ஆட்டோவில் வந்த 2 பேர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.

ரத்த வெள்ளத்தில் இருந்த தினேஷை அங்கிருந்தவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்த விசாரணையில் கொல்லப்பட்ட தினேஷ், அதே பகுதியை சேர்ந்த பெண் ஓவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இந்த பெண்ணின் கணவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்