முதலிரவு பிரச்சனை.. தந்தையை கொன்ற மகன்.!

முதலிரவு பிரச்சனை..  தந்தையை கொன்ற மகன்.!

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகன் இளமதி. இவருக்கு நேற்று முன்தினம் திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணத்தில் கிடைத்த மொய்ப் பணம் மற்றும் திருமண ஏற்பாட்டுக்கு செய்யப்பட்ட வரவு செலவுகள் குறித்து அன்று இரவே அப்பாவும் மகனும் கணக்குப் பார்த்தனர்.

கணக்கு பார்த்ததில் முன்னுக்குப் பின்னாக இருந்துள்ளது. கடைசி வரையிலும் கணக்கு நேராகவில்லை. இது பற்றி அவரின் அப்பா, மகனிடம் கேட்க இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அதற்கு அவரின் மகன் காலையில் கணக்கைப் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு வீட்டுக்குள் செல்ல முயன்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த அவரின் அப்பா சண்முகம், கணக்கை சரியாக சொல்லிவிட்டு வீட்டுக்குள் போ எனக் கூறியுள்ளார்.

விடிந்த பிறகு கணக்கை பார்த்துக்கலாம் என கூறியுள்ளார் இளமதி. ஆனால் அதற்கு அவரின் அப்பா சண்முகம் முதலிரவுதான் இப்போது முக்கியமா, கணக்கு வழக்கு முக்கியமா என்று பேசியுள்ளார்.

மரியாதையா கணக்கை சொல்லிட்டுப் போடா என்று கூறி மகனின் கையை பிடித்து நிறுத்தியதாகக் சொல்லப்படுகிறது.

அதற்கு அவர் அப்பாவின் கையைத் தட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். இதனால் கோபமடைந்த சண்முகம், அருகில் கிடந்த ரீப்பர் கட்டையை எடுத்து தன் மகனைத் தாக்கியிருக்கிறார்.

அந்த ரீப்பரை தந்தையிடமிருந்து பிடுங்கி அவரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். மேலும் அவரை இளமதி கீழே தள்ளியிருக்கிறார். மயக்க நிலையில் சண்முகம் கிடக்கிறார் என்று உறவினர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீர் தெளித்துப் பார்த்திருக்கிறார்கள்.

கடைசி வரையில் சண்முகம் எழுந்திருக்கவில்லை. பதற்றமடைந்த அவரின் உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சண்முகத்தைப் பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டார் எனக் கூறி சென்று விட்டனர்.

இது பற்றி சண்முகத்தின் தம்பி அண்ணாதுரை, உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிவு செய்து இளமதியைக் கைது செய்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்