நிலத்தகறாறில் அரிவாள் வெட்டு

நிலத்தகறாறில்  அரிவாள் வெட்டு

ஒசூர்:

ஓசூர் பகுதியில் நிலத்தகராறில் ஓருவரை அரிவாளால் வெட்டியதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் பகுதியை சேர்ந்த வேணு விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருடைய உறவினர்களான சித்தப்பா முனியப்பாவும் அவரது மனைவி ராதா இருவரும் தோட்டத்தில் வேலை பார்த்து வரும் வேணுவை பின்புறமாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்திலிருந்த வேணுவை சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். தகவலனின் பேரில், பாகலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்