மும்பை:
நடந்து முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின், இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது மும்பை இண்டியன்ஸ் அணி.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அணியின் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மும்பையின் முக்கிய சாலையில் ரசிகர்களின் கூட்டத்துக்கு நடுவே வெற்றிபெற்ற கோப்பையுடன் திறந்த பேருந்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உற்சாக ஊர்வலம் சென்றனர்.