மும்பை:
மும்பையில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையின் குடோனில் பயங்கர தீ விபதது ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பை சகிநகா பகுதியில் உள்ள சுபாஷ் நகர் என்ற இடத்தில் ரசாயன குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குகடோனில் இன்று மாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்து, 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த பயங்கர தீ விபத்தில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தொழிற்சாலையில் இருந்து கரும்புகை விண்ணை நோக்கி செல்வதை மும்பையில் உள்ள மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பரவி விட்டுள்ளனர்.