சென்னை:
சென்னையில் மின்சார ரயில்ககளில் பயணம் செய்யம் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய பயணச்சீட்டு முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த பயணச்சீட்டு ஒன்று, 3 அல்லது 5 நாட்கள் என மூன்று விதமாக பெற்றுக்கொள்ளலாம். 1ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்புக்கு தனித்தனியாகவும், குழந்தைகள், பெரியவர்களுக்கு தனித்தனியாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி புறநகர் மின்சார ரயில்களில், எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்க முடியும். 2ம் வகுப்பில் நாளொன்றுக்கு குழந்தைகளுக்கு ரூ.45ம், பெரியவர்களுக்கு ரூ.70ம் கட்டணமாக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 3 நாட்களுக்கு குழந்தைகளுக்கு ரூ.70ம், பெரியவர்களுக்கு ரூ.115ம் கட்டணமாகும். 5 நாட்களுக்கு குழந்தைகளுக்கு ரூ.80ம், பெரியவர்களுக்கு ரூ.140ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.