சென்னை:
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவான படம் ‘மிஸ்டர் லோக்கல்’ ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே இன்று வெளியானது.
இந்த படம், சிவகார்த்திகேயன் ரசிகர்களையே கூட திருப்திபடுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
‘‘இப்படி ஒரு படமே வரலன்னு நெனச்சுக்கோங்க’’ எனவும், ‘‘ ரிமோட் இருந்தா மொத்த படத்தையும் ஒட்டி விட்டுருப்பேன்’’ எனவும் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் படம் முடியும் முன்பே தியேட்டரை விட்டு வெளியேறிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. இது சிவகார்த்திகேயனை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.