‘‘காஷ்மீர் மக்கள் தீவிரவாதத்துக்கு செல்வார்கள்’’

  • In General
  • September 13, 2019
  • 187 Views
‘‘காஷ்மீர் மக்கள் தீவிரவாதத்துக்கு செல்வார்கள்’’

முசாபராபாத்:

காஷ்மீர் மக்கள் மனித உரிமை மீறலுக்கு எதிராக போராட தீவிரவாதத்தை நோக்கி நகர்வார்கள் என தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் முசாபராபாத்தில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசும்போது, காஷ்மீர் மக்கள் மனித உரிமை மீறலுக்கு எதிராக போராட நிச்சயம் தீவிரவாதத்தை நோக்கி செல்வார்கள் என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீரின் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன் இந்த அட்டூழியங்களுக்கு எதிராக மக்கள் நிற்பார்கள். காஷ்மீரின் நிகழ்வுகளை 1.25 பில்லியன் முஸ்லிம்கள் கவனித்து வருகிறார்கள் என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்