‘‘நட்புக்கு முடிவு இல்லை’’ கிரேசி மோகனுக்கு கமல் இரங்கல்..!

  • In Cinema
  • June 10, 2019
  • 214 Views
‘‘நட்புக்கு முடிவு இல்லை’’ கிரேசி மோகனுக்கு கமல் இரங்கல்..!

சென்னை:

திரைப்பட மற்றும் நாடக நடிகருமான கிரேசி மோகன் இன்று காலை சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘நண்பர் கிரேசி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.

‘‘கிரேசி’’ என்பது அவருக்கு பொருந்தாத பட்டம். அவர் ‘‘நகைச்சுவை ஞானி’’ அவரது திறமைகளை அவர் குறைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னை காட்டிக்கொண்டார் என்பது உண்மை.

பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசததை வெளிகாட்டியவர். அவர் நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்.

நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால் தான் நட்பா என்ன? மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன்.

அவரது குடும்பபம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பை தாங்கிக்கொள்ள அவர்கள் பழிகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்