தாய் மகன் தற்கொலை

தாய் மகன் தற்கொலை

ஓசூர்

ஓசூர் அருகே குடும்ப தகராறு காரணமாக தாய் மகனுடன் நீரோடையில் விழுந்து தற்கொலை செய்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே பேவநத்தம் – பஞ்சப்பள்ளி செல்லும் நீரோடையில் பெண் மற்றும் 3 வயது மதிக்கத்தக்க ஆண்குழந்தை இறந்தநிலையில் கிடப்பதாக இன்று மாலை அப்பகுதியினர் கெலமங்கலம் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில்,கெலமங்கலம் அருகே உள்ள கொத்தூல் கிராமத்தை சேர்ந்த சாம்ராஜ் என்பவரின் மனைவி ராதா(23) இவர்களுக்கு 3 வயதில் பரத் என்கிற ஆண் குழந்தையும் இருந்துள்ளது.

ராதாவிற்கு வீட்டில் ஏற்ப்பட்ட குடும்ப பிரச்சனைக்காரணமாக 3 வயது மகனுடன் நீரோடையில் குதித்து இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுக்குறித்து புகார் பதிவு செய்த கெலமங்கலம் போலிசார் சாம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்