இங்கிலாந்து கேப்டன் ஒருநாள் போட்டியில் விளையாட தடை..!

  • In Sports
  • May 15, 2019
  • 205 Views
இங்கிலாந்து கேப்டன் ஒருநாள் போட்டியில் விளையாட தடை..!

இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு பாகிஸ்தான் அணிகளுக்கு இடையான 4வது ஒருநாள் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 358 ரன்கள் எடுத்திருந்தது.

பாகிஸ்தான் பேட்டிங் செய்யும்போது, இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனை நடுவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கெனவே, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியிலும் இதே நிலைமையில் பந்து வீசியுள்ளனர். ஒரு வருடத்தில் 2 முறை நடந்தால், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

இதனால், நாளை மறுநாள் நாட்டிங்காமில் நடக்கும் 4வது போட்டியில் விளையாட கேப்டன் மோர்கனுக்கு தடை விதித்துள்ளது. மேலும், 40 சதவீதம் அபராதமும், சக வீரர்களுக்கு 10 சதவீத அபராதமும் விதிக்கிறது என ஐசிசி தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்