அதிக வாக்குகள்; அள்ளிக்குவித்த பாராட்டுகள்

அதிக வாக்குகள்; அள்ளிக்குவித்த பாராட்டுகள்

ஒசூர்:

ஒசூர் ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் அதிகப்படியான வாக்குகளுடன் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ஒருவர் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

ஒசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 16வது வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் ஜனவரி 2 அன்று வெளியானது. இதில் ஒசூர் ஒன்றியம் 16 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட இளைஞர் சம்பத் குமார் ஒன்றியத்திலேயே அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 1,719 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இளைஞர் சம்பத்குமாரின் இந்த வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதுக்குறித்து பேசிய சம்பத்குமார், தனக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளித்த மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஒசூர் எம்எல்ஏ சத்யா, மற்றும் முருகன் எம்எல்ஏ ஆகியோருக்கும் பெருவாரியான வாக்குகளை வாரி வழங்கிய 16 ஆம் வார்டு வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்