மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: மாயாவதி

மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: மாயாவதி

லக்னோ:
மோடியின் பிரதமர் கனவு மீண்டும் பலிக்காது என தன்னுடைய டுவிட்டர் பதிவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மாயாவதியின் டுவிட்டர் பதிவில், மோடி தன்னை பிற்படுத்தப்பட்டவர் என கூறிவருகிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால், ஆர்எஸ்எஸ் மோடியை பிரதமராக அனுமதிக்காது.

குஜராத்தில் கவுரவமான வாழ்க்கையை தலித்துக்கள் வாழ முடியாது. அவர்களின் திருமணத்தின்போது குதிரை சவாரிக்கு அனுமதி இல்லை. தலித்களுக்கு எதிராக பல அட்டூழியங்கள் நடக்கின்றன.

இந்த தேர்தலில் பா.ஜ., நிச்சயம் தோற்கும் நிலையும், அக்கட்சி விரக்தியில் உள்ளது என்பதையுமே அக்கட்சியினரின் பேச்சுக்கள் காட்டுகின்றன. பா.ஜ., நினைப்பது போல் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது. மோடி மீண்டும் பிரதமராகும் கனவு நிறைவேறாது என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்